இந்தியா

சொத்து தகராறு ;தந்தையைக் கொலை செய்ய நண்பர்களுடன் சேர்ந்து திட்டம் போட்ட மகன்!

மைசூரில் சொத்துக்காக தனது தந்தையை நண்பர்களுடன் சேர்த்து மகனே கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், மைசூரில் உள்ள டி.நர்சீபூர் தாலுகாவில் உள்ள அலகுடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராசப்பாஜி(60). இவரது மகன் சுபாஷ்(25). ராசப்பாஜிக்கும், அவரது மகன் சுபாஷீக்கும் சொத்துத் தகராறு இருந்துள்ளது. இதனால் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.

இதனால் தனது தந்தையைக் கொலை செய்ய சுபாஷ் முடிவு செய்தார். இதுதொடர்பாக அவரது நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன்படி நேற்று இரவு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த ராசப்பாஜியை மகன் சுபாஷ் மற்றும் அவரது நண்பர்கள் கத்தியால் கழுத்து, உடல் என பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினர். இதனால் ராசப்பாஜியின் அலறல் சத்தம் கேட்டவுடன், அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். இதனால் சுபாஷ் உள்ளிட்டோர் தப்பியோடி விட்டனர்.

யாழ்.நகரில் வர்த்தகர் ஒருவர் மீது கத்திக்குத்து!

இதையடுத்து அக்கம் பக்கத்தினர், ராசாப்பாஜியை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் உடனடியாக சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி செய்த மருத்துவர்கள், மைசூரில் உள்ள கே.ஆர். மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ராசப்பாஜி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இக்கொலை முயற்சி சம்பவம் குறித்து நரசிப்பூர் காவல் நிலைய பொலிஸார் வழக்குப் பதிவு செய்து சுபாஷ் மற்றும் நண்பர்களைத் தேடி வருகின்றனர். சொத்துக்காக மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து தந்தையை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவம், அலகுடு கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 18 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!