அரசியல் செய்தி

உறுதிமொழிகள் காற்றில்: என்.பி.பி. அரசுக்கு ராதா எம்.பி. எச்சரிக்கை!

“மக்கள் மத்தியில் அரசாங்கத்துக்கான செல்வாக்கு குறைவடைந்துவருகின்றது.” – என்று மலையக மக்கள் முன்ணியின் தலைவர் இராதாகிருஸ்ணன் எம்.பி. Radhakrishnan MP தெரிவித்தார்.

இன்னும் 4 வருடங்கள் உள்ளன என்ற நினைப்பில் இருக்காது, மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு NPP அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

“தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வலுவாக உள்ளது. எனினும், வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்கள் மத்தியில் அரசாங்கம்மீதான நம்பிக்கை குறைவடைந்துவருகின்றது.

எனவே, உறுதிமொழிகளை நிறைவேற்றினால்தான் மக்கள் மத்தியில் நிலைத்துநிற்க முடியும்.

அதேவேளை, ஊடகங்கள்மீது கைவைக்க முற்படக்கூடாது. ஏனெனில் ஊடகங்களை ஒடுக்க முற்பட்ட அரசுகளுக்கெல்லாம் நெருக்கடி நிலையே ஏற்பட்டுள்ளது.” – என ராதாகிருஸ்ணன் எம்.பி. மேலும் குறிப்பிட்டார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!