விளையாட்டு

ரோஹித் சர்மாவுடன் பிரச்சனை? சுப்மன் கில் கொடுத்த விளக்கம்

ரோஹித் ஷர்மாவுடன் பிரச்சனை என்ற தகவல் பரவிய நிலையில், அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியீட்டு சுப்மன் கில் விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்திய அணியில் மாற்று வீரர்களால் ஒருவராக இடம்பெற்றுள்ள சுப்மன் கில் ஒழுங்கீன நடவடிக்கை காரணமாக இந்தியாவுக்கு திரும்ப இருப்பதாக சமீபத்தில் விமர்சனங்கள் எழுந்தது.

அது மட்டுமின்றி, சுப்மன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேப்டன் ரோஹித் ஷர்மாவை பாலோவ் செய்து இருந்த நிலையில், விமர்சனங்கள் எழுந்தவுடன் அன்பாலோவ் செய்துவிட்டதாகவும் புதிய பிரச்சனை வெடிக்க தொடங்கியது.

இதனையடுத்து, ரோஹித் ரசிகர்கள் சுப்மன் கில்லை திட்டு சமூக வலைத்தளங்களில் பதிவுகளை வெளியீட்டு வந்தனர்.

நெட்டிசன்கள் பலரும் இந்திய கேப்டனை பலோவ் செய்யவில்லையா என்பது போல கேள்விகளை எழுப்ப தொடங்கினர்.

ரோஹித் ஷர்மாவை கில் அன்ஃபாலோவ் செய்த பிறகு இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாகவும் செய்திகள் பரவ தொடங்கியது.

உண்மை என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், இவை அனைத்திற்கும் விளக்கம் கொடுக்கும் விதமாக சுப்மன் கில் ரோஹித் ஷர்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ரோஹித் ஷர்மாவுடன் தனியாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும், ரோகித் சர்மா மற்றும் அவரது மகள் சமைராவுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட இரண்டு புகைப்படத்தையும் பகிர்ந்த சுப்மன் கில் ” ரோகித் சர்மாவிடம் இருந்து நானும் சமைராவும் ஒழுக்கத்தை எப்படி கற்று கொள்வது என்பதை கற்று வருகிறோம் ” என பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

(Visited 6 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content