பொழுதுபோக்கு

27 வருடங்களுக்கு பின் மீண்டும் பிரபு தேவாவுடன் ஜோடி சேரும் பிரபல நடிகை

தென்னிந்திய திரையுலகில், ஒரு நடன இயக்குனராக தன்னுடைய கேரியரை துவங்கி, பின்னர் நடிகராக மாறியவர் பிரபு தேவா. அதே போல் திரைப்பட இயக்கம் மற்றும் தயாரிப்பாளராகவும் சில வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

இந்த நிலையில், பிரபுதேவா தெலுங்கு இயக்குனர் சரண் உப்பலபாடி இயக்கத்தில் ஒரு ஹிந்தி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடிகர் பிரபு தேவாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை கஜோல் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் ஏற்கனவே இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் கடந்த 1997-ஆம் ஆண்டு வெளியான ‘மின்சார கனவு’ படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் கஜோலுக்கு தமிழில் அறிமுக படமாகவும் அமைந்தது. இப்படம் சூப்பர் ஹிட் வெற்றிபெற்றதோடு நடிகர் பிரபு தேவாவுக்கு சிறந்த நடிகருக்கான, தேசிய விருதையும் பெற்று தந்தது.

இந்த படத்திற்கு பின்னர், சுமார் 27 வருடங்கள் கழித்து நடிகர் பிரபுதேவாவுக்கு கஜோல் ஜோடியாக நடிக்க உள்ளார் என்கிற தகவல் இந்த படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

இந்த படத்தில் நஸீருத்தீன் ஷா, சம்யுக்தா மேனன் உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளதாகவும், இந்த படத்திற்கு ஜிகே விஷ்ணு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள நவீன் நூலி படத்தொகுப்பு செய்ய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content