இலங்கை செய்தி

இந்தியாவில் சிக்கிய இலங்கையை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் சந்தேக நபர்கள் – பொட்டா நௌபரின் மகனும் இருப்பதாக தகவல்

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சந்தேக நபர்களாக கடந்த வாரம் இந்தியாவில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களில் ஒருவர் பாதாள உலக தலைவரான பொட்டா நௌபர் எனப்படும் நியாஸ் நௌபர் என்பவரின் மகன் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீர்கொழும்பில் வசிக்கும் 33 வயதான மொஹமட் நுஸ்ரத் மற்றும் கொழும்பில் வசிக்கும் 27 வயதான மொஹமட் நஃப்ரான், 43 வயதான மொஹமட் ரஷ்டீன் மற்றும் 35 வயதான மொஹமட் பாரிஷ் ஆகியோரே  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில், 27 வயதான மொஹமட் நஃப்ரான், பிரபல குற்றவாளி ‘பொட்டா நௌபர்’ எனப்படும் நியாஸ் நௌபர் என்பவரின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு நீதிபதி சரத் அம்பேபிட்டிய படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நியாஸ் நௌபர் எனப்படும் பொட்டா நௌபர் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் கொரோனாவால் உயிரிழந்தார்.

மேலும் விசாரணையில், பாடசாலையை விட்டு வெளியேறிய பிறகு, முகமது நஃப்ரான் இலங்கையில் விற்க துணி வாங்குவதற்காக இந்தியாவுக்கு அடிக்கடி வரத் தொடங்கினார்.

2017 ஆம் ஆண்டு, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த சந்தேக நபர்களால் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களை இலங்கைக்கு வழங்குமாறு இந்திய பாதுகாப்பு தரப்பினரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content