ஆசியா

சிங்கப்பூரில் பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்டவர்களை சுற்றிவளைத்த பொலிஸார்

சிங்கப்பூரில் 200 க்கும் மேற்பட்ட நபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பாலியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 17 முதல் 57 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 12 மற்றும் கடந்த திங்கட்கிழமைக்கு இடையில், குற்றப் புலனாய்வுத் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சிங்கப்பூர் முழுவதும் பல இடங்களில் ஒருங்கிணைந்த சோதனைகளை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.

வணிக வளாகங்கள், மசாஜ் நிறுவனங்கள், அழகு நிலையங்கள், ஹோட்டல்கள் மற்றும் குடியிருப்பு வீடுகள் ஆகிய இடங்களிலும் அதிரடி சோதனை நடந்தது. கைது செய்யப்பட்ட 212 பேரில், 207 பெண்கள் மற்றும் ஐந்து ஆண்கள் அடங்குவர்.

பாலியல் சேவை செய்ய ஒரு பெண்ணை வாங்கியதாக 41 வயதான சிங்கப்பூர் நபர் மீது கடந்த 19ஆம் திகதி அன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.

கைது செய்யப்பட்ட மற்ற அனைவரிடமும் விசாரணைகள் நடந்து வருவதாக கூறப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!