அணியில் இருந்து தற்காலிகமாக பத்தும் நிஸ்ஸங்க விலகினார்
இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து பத்தும் நிஸ்ஸங்க தற்காலிகமாக விலகியுள்ளார்.
தனது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதையடுத்து நேற்று (28) இரவு பாத்தும் நிஸ்ஸங்க வீட்டிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் அவர் இன்று மீண்டும் இலங்கை அணியுடன் இணைய உள்ளார்.
இதன்படி நாளை (30) நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பத்தும் நிஸ்ஸங்க விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 57 times, 1 visits today)





