பாகிஸ்தான் பிரதமருக்கு பறக்கும் ‘அழைப்புகள்’: நாளை நடக்கப்போவது என்ன?
இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதில் பாகிஸ்தான் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.
இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக போர்நிறுத்தத்தை நிரந்தர ஒப்பந்தமாக மாற்றும் நோக்கில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
பாகிஸ்தானின் இந்த ராஜதந்திர முயற்சியைப் பாராட்டும் வகையில் துருக்கி, பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் தொலைபேசி வாயிலாக வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
நாளை சனிக்கிழமை தொடங்கவுள்ள இந்த ஆலோசனைக் கூட்டம் பிராந்தியத்தில் நீண்டகால அமைதியை ஏற்படுத்துவதற்கான ஒரு முக்கிய வாய்ப்பாகக் கருதப்படுகிறது.





