வட அரபிக்கடலில் ஆபத்தில் சிக்கிய 18 பேர் மீட்பு
வட அரபிக்கடலில் ஆபத்தில் சிக்கிய வர்த்தகக் கப்பலில் இருந்த 18 கப்பல் பணியாளர்களை மீட்டுள்ளதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது.
அந்தக் கப்பல் “கோல்ட் ஆட்டம்” என அடையாளம் காணப்பட்டதாகவும், மீட்கப்பட்டவர்கள் சீனா, பங்களாதேஷ், மியான்மர், வியட்நாம் மற்றும் இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்புக்குப் பிறகு, அவர்களுக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டு, தாயகம் திரும்புவதற்காக கராச்சிக்கு அழைத்து வரப்பட்டதாக பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது.
மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.





