செய்தி விளையாட்டு

பாகிஸ்தான், இங்கிலாந்து பெண்கள் உ – கோ போட்டி மழையால் ரத்து

2025ம் ஆண்டிற்கான மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது.

அந்த வகையில், கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற 16வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

நாணய சுழற்சியை வென்று பாகிஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது.

போட்டியின் இடையில் மழை குறுக்கிட்டதால் DLS (Duckworth–Lewis–Stern) முறையில் போட்டி 31 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது.

இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட 31 ஓவர்களுக்கு இங்கிலாந்து அணி 9 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து 134 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 6.4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 34 ஓட்டங்கள் பெற்று சிறப்பாக விளையாடி கொண்டிருந்த போது மழை காரணமாக போட்டி மீண்டும் இடைநிறுத்தப்பட்டது.

தொடர்ந்து மழை இடைவிடாது பெய்ததால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!