விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் பாபர் அசாம் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

டி20 உலக கோப்பை முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி நடப்பு உலக கோப்பை தொடரில் அமெரிக்க அணியிடம் தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறியிருக்கிறது. அந்த அணி அமெரிக்காவிடம் தோல்வி அடைந்ததை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

இப்படியான தோல்வியை அவர்களால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் மற்றும் பிளேயர்கள் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியில் இடம் கிடைக்காத பிளேயர்களும் பாபர் அசாமை விமர்சித்து தள்ளுகின்றனர். இந்த சூழலில் தான் பாபர் அசாம் மீது மேட்ச் பிக்சிங் புகார் எழுந்திருக்கிறது.

இதனை பாகிஸ்தான் அணியின் மூத்த பத்திரிக்கையாளர்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றனர். டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணியின் தோல்விக்கு பின்னணியில் பாபர் அசாமின் மேட்ச் பிக்சிங் இருப்பதாக தெரிவித்துள்ளனர். மூத்த பத்திரிகையாளர் முபாஷிர் ருக்மான் இது குறித்து வெளியிட்டிருக்கும் வீடியோவில், பாபர் அசாம் ஆடி கார் வைத்திருப்பதை பார்த்து மகிழ்ச்சியடைந்ததாகவும், அதனை பாபர் அசாமுக்கு அவருடைய அண்ணன் பரிசளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த கார் 7 முதல் 8 கோடி ரூபாய் விலை இருக்கும். இவ்வளவு மதிப்பிலான காரை ஒருவர் மற்றொருவருக்கு பரிசாக கொடுக்கிறார் என்றால், அவர் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்க வேண்டும் என தெரிவித்திருக்கும் முபாஷிர் ருக்மான், பாபர் அசாம் அண்ணன் அவ்வளவு பெரிய தொழிலதிபர் எல்லாம் இல்லை, அப்படி இருக்கும்போது இவ்வளவு விலை உயர்ந்த காரை நிச்சயமாக பரிசளித்திருக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

அதனால் எங்கிருந்து அவ்வளவு விலை மதிப்புள்ள கார் பாபர் அசாம் பெற்றிருக்க வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கும் முபாஷிர் ருக்மான், அயர்லாந்து, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகியோரிடம் எல்லாம் தோற்றால் எல்லாம் கார் வராது, வேறு யாரிடம் தோற்றால் கார் வரும்? என்பது உங்களுக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை, அதுகுறித்து நானும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றும் கூறியுள்ளார். இதுதவிர, இன்னும் பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மீது வைக்கப்பட்டு வருகிறது. பயிற்சியாளராக இருந்த கேரி கிரிஸ்டன், இப்படியொரு அணியை நான் பார்த்தது இல்லை, எல்லோரும் அரசியல் செய்து கொண்டு ஒற்றுமை இல்லாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

 

(Visited 1 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ

You cannot copy content of this page

Skip to content