இலங்கை

இலங்கை: 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர் உதவியாளர் நியமனங்கள்

பெருந்தோட்டப் பாடசாலைகளுக்கான 2,535 ஆசிரியர் உதவியாளர்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அடுத்த சில வாரங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மே மாதத்திற்குள் பாடசாலைகளில் நியமனங்கள், ஆரம்ப பயிற்சிகள் மற்றும் பதவிகளை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்தார்.

தோட்டத் துறைப் பாடசாலைகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகத் தெரிவித்த அவர், கல்லூரிக்குத் தகுதிபெறும் மாணவர்களே மிகக் குறைவு என்றும் பட்டதாரிகளில் ஒரு சிலரே உள்ளனர்.

இதற்கு தீர்வாக ஊவா மற்றும் மத்திய மாகாணங்களைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு ஆரம்ப கட்ட நடவடிக்கையாக நியமனம் வழங்குவதற்கு உரிய மாகாண அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!