இலங்கை செய்தி

இலங்கையில் யானையின் தாக்குதலால் நபர் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்!

திருகோணமலை -அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரமடுவ காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் (17) நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹபரன, சூரியகம- சமகி மாவத்தை பகுதியைச் சேர்ந்த தெவரக்கோட்டே கெதர பிரசன்ன (56வயது) எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரமடுவ ,மில்லகஸ்வெவ என்ற இடத்துக்கு தேன் எடுப்பதற்காக இருவர் சென்றபோது யானையின் தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளனர்த.

உயிரிழந்தவரின் சடலத்தை குறித்த காட்டில் இருந்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து கொண்டு வந்து கந்தளாய் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இதேவேளை காயமடைந்த கந்தளாய் பகுதியை சேர்ந்த கிரிகெதர சரத் ஆனந்த (46வயது) என்பவர் காயமடைநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மெதிரிகிரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை