one in, one out” ஒப்பந்தம் – பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட முதல் புகலிடக்கோரிக்கையாளர்!

பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவிற்கு இடையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வன் இன் – வன் அவுட் ஒப்பந்தத்தின் கீழ் எரித்திரியாவை சேர்ந்த நபர் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து பாரிஸ் செல்லும் விமானத்தில் உள்துறை அதிகாரிகளுடன் அவர் அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏர் பிரான்ஸ் விமானத்தில் அவர் இருந்ததை உள்துறை அலுவலகம் உறுதிப்படுத்தியது,
முதலில் சார்லஸ் டி கோல் விமான நிலையத்திற்கு வருகை தந்த அவர், விமானத்தை விட்டு வெளியேறிய உடனேயே இங்கிலாந்து அதிகாரிகளால் மூன்று பிரெஞ்சு காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சிறிய படகுகள் கடப்பதைத் தடுக்கும் நம்பிக்கையில் புலம்பெயர்ந்தோரை பரிமாறிக்கொள்வதற்கான ஒரு வருட கால ஒப்பந்தத்தை இவ்விரு நாடுகளும் மேற்கொண்டுள்ளன.
பிரித்தானியாவில் சமீபகாலமாக புலம்பெயர் கோரிக்கையாளர்களுக்கான போராட்டங்கள் வலுவாக இடம்பெற்று வருகின்றன. குடியேறிகளை வெளியேற வலியுறுத்தி 1.50 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
இது தொழிற்கட்சி அரசாங்கத்திற்கு பாரிய சவால்களை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது இந்த திட்டம் அமுற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.