இந்தியா

ஒடிசா – மனைவிக்கு வந்த ஆபாச குறுஞ்ஞெய்தி…தட்டிக் கேட்ட கணவன் குத்திக் கொலை!

தனது மனைவிக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியவரைக் கண்டித்த வாலிபர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒடிசாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரின் புறநகர் பகுதியில் உள்ள நுவாசாஹி கிராமத்தில் நேற்று இரவு கத்திக்குத்து காயங்களுடன் இளைஞர் ஒருவர் சாலையோரம் கிடந்தார். இதைப் பார்த்த வாகன ஓட்டிகள், பாலிபட்னா காவல் துறையினருக்குத தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விரைந்து வந்த பொலிஸார், கத்திக்குத்து காயங்களுடன் கிடந்தவரை மீட்டனர். அப்போது அவரது தலை மற்றும் உடலின் பல பகுதிகளில் காயங்கள் இருந்தன. உடனடியாக அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வேலையில்லாதவர்' என கிண்டல் செய்ததால், உறவினர்கள் 3 பேர் கத்தியால் குத்தி  கொலை: இளைஞர் வெறிச்செயல் | 'வேலையில்லாதவர்' என கிண்டல் செய்ததால் ...

விசாரணையில், காயமடைந்தவர் நுவாசாஹி கிராமத்தைச் சேர்ந்த அக்சய் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது குடும்பத்தாருக்கு பொலிஸார் தகவல் தெரிவித்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அக்சய் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது அக்சயின் தூரத்து உறவினரான திலு என்பவர் தான் இக்கொலை செய்ததாக அக்சயின் மனைவி ஷ்ரவாணி குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,” கடந்த 10 நாட்களுக்கு முன்பு திலு எனக்கு செல்போனில் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பினார். இதை என் கணவரிடம் கூறினேன். இதனால் என் கணவருக்கும், திலுவிற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது எனது கணவரை திலு தாக்கினார். இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அங்கு இருவரையும் பொலிஸார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

கொலை செய்யப்பட்டவரின் மனைவி ஷ்ரவாணி

இந்த நிலையில் தான், எனது கணவரை திலு அவரது தந்தை கலியா இருவரும் சேர்ந்து மரப்பலகைகளால் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்தனர்” என்று குற்றம் சாட்டினார்.இப்புகார் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

(Visited 9 times, 1 visits today)
Avatar

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content