இலங்கை செய்தி

உயர்தர விவசாய விஞ்ஞான பாடத்திற்கான புதிய பரீட்சை திகதி அறிவிப்பு

2023 (2024) க.பொ.த. உயர்தரப் பரீட்சை விவசாய விஞ்ஞான பாடத்திட்டம தொடர்பான இரண்டு வினாத்தாள்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறித்த பரீட்சைக்கான புதிய திகதியையும் அறிவித்துள்ளது.

கடந்த ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற, 2023 க.பொ.த. உயர்தரப் பரீட்சையின் (2024) விவசாய விஞ்ஞான பாடத்திற்கான II ஆம் பகுதியை பரீட்சைகள் திணைக்களம் இரத்து செய்வதாக ஜனவரி 12 ஆம் திகதி அன்று அறிவித்திருந்தது.

அதற்கமைய, விவசாய விஞ்ஞான பாடத்திற்கான II ஆம் பகுதி வினாத்தாளை இரத்து செய்து, மீண்டும் அப்பரீட்சைக்கான பகுதியை நடத்த பரீட்சைகள் திணைக்களம் முடிவு செய்தது.

அதன்படி, விவசாய விஞ்ஞான பாடத்திற்கான II பகுதி எதிர்வரும் பெப்வரி 01 ஆம் திகதி காலை 08.30 மணி தொடக்கம் முற்பகல் 11.40 மணிவரை நடைபெறும்.

விவசாய விஞ்ஞான பாடத்திற்கான I பகுதி அன்றைய தினம் பிற்பகல் 01.00 மணி தொடக்கம் பிற்பகல் 03.00 மணி வரை நடைபெறும்.

இந்தப் பரீட்சைக்கான பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டை அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதேவேளை தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்றும் இலங்கை பரீட்சைகள் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.

(Visited 10 times, 1 visits today)

KP

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!