அறிவியல் & தொழில்நுட்பம்

தண்ணீர் குடிக்காதவர்களை பாதிக்கும் மன அழுத்தம் – புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தினசரி போதுமான அளவு தண்ணீர் குடிக்காதவர்கள், அதிக கார்டிசோல் (மன அழுத்த ஹார்மோன்) வெளிப்பாடுக்கு ஆளாகிறார்கள் என தெரியவந்துள்ளது.

லிவர்பூல் ஜான் மூர்ஸ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

ஆய்வில், தினசரி 1.5 லிட்டருக்கும் குறைவாக தண்ணீர் குடித்தவர்களும், பரிந்துரைக்கப்பட்ட அளவு தண்ணீர் குடித்தவர்களும் (ஆண்களுக்கு 2.5 லிட்டர், பெண்களுக்கு 2 லிட்டர்) ஒப்பிடப்பட்டனர்.

இரு குழுக்களும் மன அழுத்த சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட போது, தண்ணீர் குறைவாக குடித்தவர்களில் அதிக கார்டிசோல் அளவு பதிவாகியது.

பேராசிரியர் நீல் வால்ஷ் கூறுகையில், “உடலின் முதன்மை மன அழுத்த ஹார்மோன் கார்டிசோல். அதன் அதிக வெளிப்பாடு இதய நோய், நீரிழிவு மற்றும் மனச்சோர்வு போன்ற நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்” என தெரிவித்தார்.

தினசரி மைக்ரோ மன அழுத்தங்களையும் (காலத்தாமதம், வேலை அழுத்தம் போன்றவை) சமாளிக்கவும், ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், நீர் உட்கொள்ளலை பேணுவது அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்