ஆசியா

அத்துமீறிய அமெரிக்க கண்காணிப்பு விமானம்… விரட்டி அடித் வடகொரிய ராணுவம்

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது. அமெரிக்கா மட்டும் இன்றி அண்டை நாடான தென்கொரியாவுடனும் கடுமையான மோதல் போக்கை கையாண்டு வரும் வடகொரியா, சர்வதேச நாடுகளின் கடுமையான எதிர்ப்பையும் மீறி ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

வடகொரியாவின் அத்துமீறலை கண்டிக்கும் விதமாக அந்நாடு மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ஆனாலும் வடகொரியா அடங்கியபாடில்லை. இந்த நிலையில், அமெரிக்காவின் கண்காணிப்பு விமானங்கள் தங்கள் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்ததாக வடகொரியா ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க கண்காணிப்பு விமானத்தை போர் விமானங்களை கொண்டு விரட்டியடித்ததாகவும் வடகொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் பங்கேற்கும் உச்சி மாநாடு வரும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாடுக்கு முன்பாக வடகொரியா, முன் வைத்திருக்கும் இந்த குற்றச்சாட்டு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

வடகொரியாவில் சீனாவின் செல்வாக்கு அதிகரித்து வருவது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது. இதற்கு மத்தியில், தென்கொரிய அதிபர் மற்றும் ஜப்பான் பிரதமரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விரைவில் சந்தித்து பேச உள்ளார். தென்கொரியாவும் அமெரிக்காவும் திங்கள் கிழமை முதல் 11 நாள் ராணுவ பயிற்சியிலும் ஈடுபட உள்ளது கவனிக்கத்தக்கது.

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!