ஆசியா

உலகின் வலிமையான ஏவுகணையை சோதனை செய்த வடகொரியா : மேற்குலக நாடுகளுக்கான எச்சரிக்கையா?

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ள வடகொரியா, இதனை “உலகின் வலிமையானது” என வர்ணித்துள்ளது.

குறித்த ஏவுகணையானது வட கொரியா சோதனை செய்த மற்ற ஆயுதங்களை விட அதிக மற்றும் நீண்ட தூரத்திற்கு பறந்துள்ளது.

அமெரிக்காவின் பிரதான நிலப்பரப்பைத் தாக்கக்கூடிய செயல்படும் ICBMகளை வைத்திருப்பதற்கு வட கொரியா கடைசியாக எஞ்சியிருக்கும் சில தொழில்நுட்பத் தடைகளில் தேர்ச்சி பெற்றுள்ளது என்பதை இது புலப்படுத்துவதாக வெளிநாட்டு நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வட கொரிய மத்திய செய்தி நிறுவனம் இந்த ஏவுகணையை “ஹ்வாசாங் -19” என்று அடையாளப்படுத்துகிறது. இது வட கொரியாவின் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வட கொரியாவின் தீர்மானத்தின் வெளிப்பாடு என்றும் விவரிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் நடந்துவரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில் மேற்குலக நாடுகளை எச்சரிக்கும் ஒரு நிகழ்வாக சர்வதேச மட்டத்தில் இது பார்க்கப்படுகிறது.

(Visited 43 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!