ஒரு டஜனுக்கும் மேற்பட்ட” ராக்கெட்டுகளை ஏவிய வடகொரியா : தென்கொரியா எச்சரிக்கை!

வடகொரியா “ஒரு டஜனுக்கும் மேற்பட்ட” ராக்கெட்டுகளை ஏவியதாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் தலைநகரான பியோங்யாங்கின் சன்’ஆன் பகுதியில் இருந்து உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் இந்த ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், “விவரங்கள் கொரிய மற்றும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளால் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன” என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையில் வடகொரியா தவறாக மதிப்பிடாத வகையில், கொரியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான கூட்டு பாதுகாப்பு நிலைப்பாட்டின் கீழ், வடகொரியாவின் பல்வேறு போக்குகளுக்கு கவனம் செலுத்தும் அதே வேளையில், எந்தவொரு ஆத்திரமூட்டலுக்கும் பெருமளவில் பதிலளிக்கும் திறனையும் நிலைப்பாட்டையும் எங்கள் இராணுவம் பராமரிக்கிறது” என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.