அடிபணியமாட்டார் நாமல்: மொட்டு கட்சி சூளுரை!
“ சவால்களை கண்டு அஞ்சும் தலைவன் நாமல் ராஜபக்ச Namal Rajapaksa அல்லர்.”என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி SLPP சூளுரைத்துள்ளது.
கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, நாமல் ராஜபக்சவின் லண்டன் உரைகள் இரத்து செய்தமை தொடர்பில் கருத்து வெளியிட்டப்பட்டது.
இதன்போது மொட்டு கட்சி உறுப்பினர், முன்னாள் ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கூறியவை வருமாறு,
“மஹிந்த ராஜபக்ச வெளிநாடு செல்லும்போதும் இவ்வாறு அன்று எதிர்ப்பு இருந்தது.
எனினும், அழைப்பு விடுத்துவிட்டனர், எனவே, கலந்துரையாடச் செல்வோம் என்ற நல்லெண்ணத்துடனேயே நாமல் சென்றார்.
அவரது உரை இரத்து செய்யப்பட்டுள்ளது என கூறி சிலர் மகிழ்ச்சியடைலாம்.
நாமல் ராஜபக்ச சவால்களுக்கு அஞ்சும் தலைவர் கிடையாது. தற்துணிவு இருப்பதால்தான் பயணத்தை ஆரம்பித்தார்.” – என்றார்.





