ராஜபக்சக்களின் ஆட்சி அணுகுமுறையாலேயே நாமலுக்கு லண்டனில் கதவடைப்பு!
ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் கையாளப்பட்ட விதம் குறித்து சர்வதேச மாணவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மத்தியில் பாரிய விரக்தி நிலவுகின்றது என்று நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார Harsana Nanayakkara தெரிவித்தார்.
இந்த அதிருப்தியே நாமலின் Namal Rajapaksa லண்டன் உரைகள் இரத்துச் செய்யப்பட்டமைக்குப் பிரதான காரணமாகும் எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டாரென தமிழ் மின்னிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் யூனியன் Britain’s Oxford Union மற்றும் கேம்பிரிட்ஜ் யூனியன் Cambridge Union என்பன நாமல் ராஜபக்சவின் உரையை இரத்து செய்துள்ள விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
” நாமல் ராஜபக்ச போன்றவர்கள் இலங்கையில் எத்தகைய அரசியலை முன்னெடுத்தார்கள் என்பதை உலகம் இன்று நன்கு அறிந்து வைத்துள்ளது.
சர்வதேச சமூகம் இப்போது மிகவும் விழிப்புடன் இருக்கின்றது. அதன் விளைவாகவே, கேம்பிரிட்ஜ் மற்றும் ஒக்ஸ்போர்ட் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் அவருக்கு இடமளிக்க மறுத்துள்ளன.
ராஜபக்சக்களின் ஆட்சிக்காலத்தில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் கையாளப்பட்ட விதம் குறித்து சர்வதேச மாணவர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர் மத்தியில் பாரிய விரக்தி நிலவுகின்றது.
இந்த அதிருப்தியே நாமலின் உரைகள் இரத்துச் செய்யப்பட்டமைக்குப் பிரதான காரணமாகும்.” எனவும் நீதி அமைச்சர் கூறினார் என மேற்படி செய்தியில் கூறப்பட்டுள்ளது.
கேள்விகளுக்குப் பயப்படுபவர்கள் அல்லது மற்றவர்கள் கேள்வி கேட்கும் சூழலை உருவாக்காதவர்கள், இத்தகைய உயரிய கல்வி நிறுவனங்களில் உரையாற்றத் தகுதியற்றவர்கள்.
ஒரு ஜனநாயக நாட்டில் இது போன்ற எதிர்ப்புகள் எழும்போது, அந்த நாட்டு கல்வி நிறுவனங்கள் அதற்கு மதிப்பளிப்பது இயல்பான ஒன்றாகும்.
லண்டன் பல்கலைக்கழக மாணவர்கள் தமது பாதுகாப்பு மற்றும் சுதந்திரமான விவாதம் குறித்து கவலை தெரிவித்தது முற்றிலும் நியாயமானது. கடந்த கால கசப்பான அனுபவங்களே இத்தகைய போராட்டங்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன.” – என நீதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.




