மொஸ்கோ தாக்குதல் : நீதிமன்றத்தில் முன்னிலையான சந்தேகநபர்கள்!

மொஸ்கோவில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் இருவர் தங்களின் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் இன்று (25.03) முன்னிலையான நிலையில் அவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
மாஸ்கோவின் குரோக்கஸ் சிட்டி ஹாலில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் குறைந்தது 03 குழந்தைகளும் உள்ளடங்குவதாக புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பலியானவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
(Visited 10 times, 1 visits today)