இந்தியா

பண மோசடி வழக்கு: அனில் அம்பானியின் உதவியாளர் கைது

பணமோசடி வழக்கு தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானியின் உதவியாளரும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அனில் அம்பானி தனக்குச் சொந்தமான ‘ராகாஸ்’ நிறுவனங்களுக்காக ‘யெஸ்’ வங்கியில் 3,000 கோடி ரூபாய் கடன் பெற்றிருந்தார்.ஆனால் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் பெயரில் பெற்ற கடன் தொகையை உரிய காரணத்துக்குப் பயன்படுத்தாமல், சட்டவிரோதமாக மற்ற நிறுவனங்களுக்கு மாற்றம் செய்துள்ளதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்போது, அனில் அம்பானி மொத்தம் ரூ.17,000 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளதாக CBI புகார் தெரிவித்ததுடன் இரண்டு வழக்குகளையும் பதிவு செய்தது.

சட்டவிரோதப் பணப் பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், அவரது வீடு, அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

அனில் அம்பானியிடம் பல மணி நேரம் நேரடியாக விசாரணை நடத்தப்பட்டது.இந்த மோசடி வழக்கில் அடுத்தகட்டமாக அனில் அம்பானியின் உதவியாளரும் ரிலையன்ஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குநருமான அசோக் குமாரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

அவரிடம் விசாரணை நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!