இந்தியா

இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமரான மோடி – பதவியேற்பு விழா ஏற்பட்ட மர்மம்

இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.

பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவின் போது ராஷ்டிரபதி பவனின் மேடைக்கு பின்னால் மர்ம விலங்கு நடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த சம்பவம் கேமராவில் பதிவாகியுள்ளது. பாஜக எம்பிக்கள் துர்காதாஸ் உகே மற்றும் அஜய் தம்தா ஆகியோர் பதவியேற்றனர்

இந்த நிகழ்வின் போது இந்த மர்ம உயிரினம் படிக்கட்டுகளில் பலமுறை காணப்பட்டதாகவும் அது ஆர்வமூட்டுவதாகவும் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விலங்கு தனது சொந்த இடத்தில் வாழும் விலங்கு என்று இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எவ்வாறாயினும், இது தொடர்பில் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குடியரசுத் தலைவரின் அதிகாரப்பூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு உலகம் முழுவதிலுமிருந்து 8,000க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் அழைக்கப்பட்டனர்.

(Visited 41 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!