இலங்கை செய்தி

இலங்கையில் 18 வயதுக்குட்பட்டவர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனைக்கு விதிமுறை

18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி பாவனைக்கான விதிமுறைகளை கொண்டு வருவதற்கு தயார் என சிறுவர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் திருமதி கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடுகளை விதிப்பதற்கும் அது தொடர்பான சட்ட கட்டமைப்பை தயாரிப்பதற்கும் ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளின் தலைமுறைக்கு மொபைல் போன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கூறுகிறார்.

குழந்தைகள் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் புதுப்பிக்கப்பட வேண்டும் என்பதில் எந்த வாதமும் இல்லை, ஆனால் நம் நாட்டில் பல குழந்தைகள் மொபைல் போன்களால் தங்கள் வாழ்க்கையை அழிக்கிறார்கள்.

தற்காலத்தில் கையடக்கத் தொலைபேசிகள் பாடசாலைக்குக் கூட எடுத்துச் செல்லப்படுவதாகவும், அவ்வாறு கொண்டுவருவது கண்டிப்பாக கட்டுப்படுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!