இலங்கை

இலங்கை: தேங்காய் எண்ணெய் விலை குறைப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

சந்தையில் தேங்காய் எண்ணெயின் விலை உயர்வை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தற்போது இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் ஒரு லீற்றருக்கு அரசாங்கம் 150 ரூபாவை அறவிடுவதாக அமைச்சர் அமரவீர தெரிவித்தார்.

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் என்ற ரீதியில் இந்த தொகையை குறைக்குமாறு அமைச்சரவைக்கு முன்மொழிவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் பிரகாரம், இலங்கையின் வருடாந்த தேங்காய் எண்ணெய் தேவை 25,868 மெற்றிக் தொன் என தெரிவித்த அமைச்சர், தற்போது 51,457 மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் அமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

(Visited 9 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்