இலங்கை செய்தி

மத்திய கிழக்கு போர்ச்சூழல்: IMF குழுவுக்கு அநுர விளக்கம்!

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவினர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து பேச்சு நடத்தினர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மேற்படி சந்திப்பு நடைபெற்றது.
இலங்கையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ் இதுவரை அடைந்துள்ள முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காகவே ஐ.எம்.பி. குழுவினர் ஜனாதிபதியை சந்தித்தனர்.

இதன்போது, நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின் தற்போதைய நிலை குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், அண்மைக்கால பொருளாதார முன்னேற்றங்கள் மற்றும் தற்போது அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதியுடன் பிரதிநிதிகள் குழுவினர் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளின் பாராட்டைப் பெற்றது.

குறிப்பாக, பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைதல், வருமானத்தை முறையாக முகாமைத்துவம் செய்தல் மற்றும் வெளிநாட்டு கையிருப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம், நாட்டின் பொருளாதாரம் முன்னைய நிலையுடன் ஒப்பிடுகையில் அதிக தாங்கும் திறன் கொண்ட பொருளாதாரமாக மாறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

அடைந்துள்ள பொருளாதார ஸ்திரத்தன்மையை முன்னெடுத்துச் செல்வதோடு, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்துடன் எதிர்வரும் காலங்களில் செயற்படும் முறைமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள வெளிப்புற சவால்களுக்கு மத்தியில், எரிபொருள் விலை மற்றும் வலுசக்தி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கத்தை முகாமைத்துவம் செய்வதற்குத் தேவையான வேலைத்திட்டங்களை அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களையும் பாதிப்புகளையும் குறைப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!