இலங்கை முழுவதும் அதிரடி சோதனை நடவடிக்கை – ஆயிரக்கணக்கானோர் கைது
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
முப்படையினர் இணைந்து நேற்று மேற்கொண்ட சோதனையின் போது 4,626 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விசேட சுற்றிவளைப்பின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 19 பேரும், சந்தேகத்தின் பேரில் 601 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 242 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 160 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 22 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 18 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3564 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.





