இலங்கை

இலங்கை முழுவதும் அதிரடி சோதனை நடவடிக்கை – ஆயிரக்கணக்கானோர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முப்படையினர் இணைந்து நேற்று மேற்கொண்ட சோதனையின் போது 4,626 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 19 பேரும், சந்தேகத்தின் பேரில் 601 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 242 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 160 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 22 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 18 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3564 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்