இலங்கை செய்தி

மன்னார் சிறுமி கொலை வழக்கு – சந்தேகநபரை கைது செய்ய பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

தேடப்படும் சந்தேக நபரை கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

இந்த சந்தேக நபர் தலைமன்னார் பிரதேசத்தில் 9 வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர்.

சிறைச்சாலையில் இருந்தபோது சுகயீனமடைந்து சிகிச்சை பெற வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிறைச்சாலை அதிகாரிகளிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்துல் ரஹ்மான் எனப்படும் கந்தையா விஜயன் திருகோணமலை, குச்சவெளியை வசிப்பிடமாகக் கொண்டவராவார்.

55 வயதுடைய சந்தேகநபருக்கு வலது கையின் கீழ் பகுதியில் காயம் தழும்பும், மார்பின் மேல் இடது பக்கத்தில் கரும்புள்ளியும், மார்பின் நடுப்பகுதியில் குணமடைந்த காயமும் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் 071 8591364 அல்லது 071 8591370 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content