வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த நபர் கட்டுநாயக்க விமானத்தில் கைது

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த நபர் ஒருவர் கட்டுநாயக்க விமானத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஏராளமான சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு டுபாயில் இருந்து இலங்கைக்கு விமானத்தில் வந்த நபர் ஒருவர் சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 59,980 சிகரெட்டுகளை வைத்திருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொட்டாவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடையவராகும்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 5 times, 1 visits today)