திருகோணமலையில் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட நபருக்கு விளக்கமறியல்!
திருகோணமலையில் ஐஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம். எஸ்.சம்சுதீன் முன்னிலையில் இன்று (31) சந்தேக நபரை ஆஜர்படுத்திய போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட பிராந்திய குற்ற தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சந்தேக நபரை சோதனை இட்டபோது ஐஸ் போரைப் பொருள் 12 கிரேம் 08 மில்லி கிரேம் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் திருகோணமலை-யாட்அப் ரோட் பகுதியில் வசித்து வரும் 29 வயது உடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விசாரணை செய்த பின்னர் துறைமுக பொலிஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து இக்கட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.





