இலங்கை

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் கொடுப்பனவு!

இலங்கையில் நடத்த உள்நாட்டு போரின்போது அவையங்களை இழந்து அங்கவீனமுற்றோர் மற்றும் கணவரை இழந்தவர்களுக்கு உதவிதொகையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தற்போதுள்ள நடைமுறைகளின்படி, அங்கவீனமுற்ற ஒருவர் 55 வயதை அடையும் முன் இறந்தால், அந்த மரணத்திற்கான காரணத்தை மருத்துவ வாரியம் உறுதிப்படுத்த வேவண்டும் என்றும் அமைச்சு கூறியுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்குவது குறித்து கணிசமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவ் அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய,  அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அமைச்சரவை அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

எனவே, ஓய்வுபெற்ற ஊனமுற்ற சேவையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் சில குழுக்கள் இந்த விவகாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை அவதானித்துள்ளதாகவும்  ஓய்வுபெற்ற முப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனை எதிர்காலத்திலும் உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும்  பாதுகாப்பு அமைச்சகம் உறுதியளித்துள்ளது.

(Visited 7 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content