லெபனானில் 24 மணிநேரத்துக்குள் இத்தனை பேர் பலியா?
லெபனான்மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தொடர் வான்வழித் தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது.
1000 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் சுகாதார அமைச்சு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட் மற்றும் நாட்டின் பிற பகுதிகளை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலால் பேரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
இன்றும் லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை நடத்திவருகின்றது.
இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.





