இந்தியா

கள்ளக்குறிச்சி சம்பவம்: பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சோி ஆகிய பகுதிகளில் கடந்த 18 மற்றும் 19ஆந் திகதிகளில் விஷ சாராயம் குடித்து 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இவர்கள் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை அடுத்தடுத்து உயர்ந்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அந்த வகையில் நேற்று முன்தினம் வரை சிகிச்சை பலனின்றி 59 போ் உயிாிழந்தனர்.

28 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 138 பேர் சிகிச்சையில் இருந்தனர்.

இந்த சூழலில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 4 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிாிழந்தனர்.

இதனால் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 63 ஆக உயர்ந்திருந்தது.

இந்நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேஷ் என்பவர் இன்று உயிரிழந்தார். இதனால் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது. தற்போது மருத்துவமனைகளில் 75 போ் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

(Visited 2 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே

You cannot copy content of this page

Skip to content