இலங்கை செய்தி

98வது வயதில் இறைவனடி சேர்ந்த கலாநிதி ராஜ ராஜ ஸ்ரீ சிவஶ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள்

பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய பிரதம குருவும் , ஆதீன கர்த்தாவும் ஆகிய கலாநிதி ராஜ ராஜ ஸ்ரீ சிவஶ்ரீ நகுலேஸ்வரக் குருக்கள் அவர்கள் நேற்று (15.07.2023) 98 வது வயதில் இறைபதமடைந்தார்.

இவரின் இறுதிக்கிரியைகள் இன்று மாலை 1.30 மணியளவில் நடைபெற்று இறுதி ஊர்வலம் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகி கீரிமலை இந்து மயானத்தில் இவரது புனித உடல் தீயுடன் சங்கமமாகியது.

இதன்போது பொலிஸார் வானத்தை நோக்கி மூன்று தடவை துப்பாக்கி வேட்டுக்களை தீர்த்து அரசு மரியாதையை செலுத்தினர்.

1925/05/27 ம் திகதி யாழ்.நகுலேஸ்வரத்தில் குமாரசுவாமிக்குருக்கள் அன்னம்மா தம்பதிகளுக்கு மகனாக இவ்வுலகில் அவதரித்தார்.

இவர் வேதநாயகியம்மாவை மணம் முடித்து எட்டு குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.

1948 ஆம் ஆண்டில் இருந்து நகுலேஸ்வரர் ஆலய ஆதின கர்த்தாவாக 75 வருடங்கள் தொண்டாற்றியவர்

இராஜராஜசிறி நகுலேஸ்வரானுக்கிரக வித்தியாதரர் சிவாகம கலாநிதி வேத சிவாகம விற்பன்னர் பட்டங்களை பெற்றவர்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content