பொழுதுபோக்கு

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் திடீரென வைத்தியசாலையில் அனுமதி..

இந்திய அளவில் மட்டுமில்லாமல் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வளர்ந்து வரும் இளம் நடிகையாக உலா வந்து கொண்டிருப்பவர் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.

அழகும் கவர்ச்சியும் ஒருசேர அமைந்துள்ள ஜான்வி கபூரை தமிழிலும் விரைவில் நாயகியாக்க தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு ஜான்வி கபூர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தமிழில் நடிகர் சூர்யாவுடன் பாலிவுட்டில் உருவாக உள்ள கர்ணா படத்தில் ஜான்விகபூர் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள உலஜ் படம் வரும் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்கான அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஜான்வி கபூர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார்.

நேற்றைய தினம் அவர் ஃபுட் பாய்சனிங்கால் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அவரால் இயல்பு வாழ்க்கையில் ஈடுபட முடியவில்லை. இதனால் அவர் தன்னுடைய ப்ரொமோஷன்கள் மற்றும் ஷூட்டிங் ஆகியவற்றை கேன்சல் செய்துவிட்டு வீட்டிலேயே ஓய்வெடுத்தார்.

ஆனாலும் நிலைமை மிகவும் மோசமடைந்த நிலையில், இன்றைய தினம் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நாளைய தினம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆவார் என்று கூறப்படுகிறது.

(Visited 32 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்