இந்தியா செய்தி பொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜன நாயகன்’: தணிக்கைச் சான்றிதழ் வழக்கில் நாளை இறுதி முடிவு

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமான ‘ஜன நாயகன்’ வெளியாவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எச். வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் வரும் 9-ஆம் திகதி திரைக்கு வரவுள்ளது.

கடந்த மாதம் 19-ஆம் திகதி படத்தைப் பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியது.

அதன்படி மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகும் இன்னும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை எனத் தயாரிப்பு நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, உடனடியாகச் சான்றிதழ் வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மத உணர்வுகளைப் புண்படுத்தும் காட்சிகள் தொடர்பான புகாரைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.

இதனால் இன்னும் டிக்கெட் முன்பதிவு தொடங்கப்படாதது ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Puvan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!