இன்றைய முக்கிய செய்திகள் செய்தி மத்திய கிழக்கு

காஸா தாக்குதலில் சட்ட திட்டங்களைப் பின்பற்றவில்லை! ஒப்புக் கொண்ட இஸ்ரேல் முப்படை தளபதி

இதுவரை காஸா மீது நடத்திய போர் நடவடிக்கைகளில், தாம் சர்வதேச சட்டங்களை பின்பற்றவில்லை என இஸ்ரேல் முப்படை தளபதி ஒப்புக்கொண்டுள்ளார்.

“காஸாவில் 22 லட்சம் மக்களில் 10 சதவீதத்துக்கும் மேல் பேர் கொல்லப்பட்டோ, காயமடைந்தோ உள்ளனர். இது ஒரு நாகரிகமான போர் அல்ல. யாரும் நீதியை கருத்தில் கொள்ளவில்லை.

மேலும், தனது நடவடிக்கைகளை இராணுவ சட்ட ஆலோசகர் யிபாத் தோமா-யெருஷலாமி உள்ளிட்டோர் கட்டுப்படுத்தவில்லை.

இதனால், இஸ்ரேல் .ராணுவ சட்ட ஆலோசகர்கள் வெறும் ஆலோசனை வழங்குபவர்களாக மட்டுமே உள்ளனர்” என இஸ்ரேல் முப்படை தளபதி ஹொ்ஸி ஹலேவி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காஸா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி, இதுவரை 64,803 பேர் உயிரிழந்துள்ளனர். 1,64,264 பேர் காயமடைந்துள்ளனர். இதை இஸ்ரேல் மறுத்துவந்தாலும், ஹலேவியின் குறிப்பு அந்த புள்ளிவிவரங்களை உறுதிப்படுத்துகிறது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!