லெபனானில் தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்தும் இஸ்ரேல்!
லெபனானில் வான்வழி தாக்குதலை உக்கிரமாக நடத்திவரும் இஸ்ரேல், தரைவழி தாக்குதலையும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கமைய லெபனானின் Bint Jbeil நகருக்குள் நுழைய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது.
இதற்குப் பதிலடியாக, ஹிஸ்புல்லாஹ் அமைப்பு கடந்த 24 மணிநேரத்துக்குள் இஸ்ரேலியப் படைகள் மீது 50-க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இருதரப்பிற்கும் இடையே நிலவும் இந்த மோதலானது லெபனானின் தெற்குப் பகுதிகளில் பெரும் போர்ச் சூழலை உருவாக்கியுள்ளது.
லெபனானிலும் போர் நிறுத்தம் அவசியம் என உலக நாடுகள் வலியுறுத்திவரும் நிலையில், அதனை ஏற்கும் நிலையில் இஸ்ரேல் தரப்பு இல்லை என விமர்சனம் எழுந்துள்ளது.





