ஈரானை மீண்டும் தாக்குவது குறித்து பரிசீலித்து வரும் ட்ரம்ப்? உளவுத்துறை கையில் முடிவு!

ஈரானை மீண்டும் தாக்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்க அதிபர், ஈரான் கணிசமான அளவில் யுரேனியத்தை வளப்படுத்த முடியும் என்று உளவுத்துறை நிறுவனங்கள் முடிவு செய்தால், சந்தேகத்திற்கு இடமின்றி மீண்டும் ஈரானை தாக்குவேன் என்று கூறினார்.
இந்த வார இறுதியில், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டு ஈரானின் நிலத்தடி அணுசக்தி நிலையங்கள் மீது பதுங்கு குழி வெடிகுண்டு தாக்குதலை நடத்தியது.
இதற்கிடையில், கடந்த செவ்வாய்க்கிழமை போர் நிறுத்தத்திற்குப் பிறகு தனது முதல் உரையில், ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இந்த தாக்குதல்களால் அமெரிக்கா குறிப்பிடத்தக்க எதையும் சாதிக்கவில்லை என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.