14 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு சாத்தியமா?

14 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுமாயின் அதற்கு இலட்சக்கணக்கான ரூபாய்கள் தேவைப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பளத்தை அதிகரிக்க வேண்டுமானால் அரச சேவையை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
வருமானத்தைப் பெருக்கினால் மட்டும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியாது என்று கூறிய அவர், வீண் செலவுகளைப் பார்க்க வேண்டும் என்கிறார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்தால் மாத்திரமே நல்ல வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் சுட்டிக்காட்டினார்.
(Visited 10 times, 1 visits today)