இலங்கை இன்றைய முக்கிய செய்திகள்

வைத்தியர் அர்ச்சுனா இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கும் அபாயம்?

எதிர்க்கட்சித் தலைவர் ஆசனத்தில் அமர்ந்து பாராளுமன்ற அதிகாரி ஒருவருடன் வார்த்தைப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட அர்ச்சுனா நேற்றைய தினம் அதிகம் பேசப்பட்ட நபராகியிருந்தார்.

இந்த நிலையில் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் பதவி பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மருத்துவ நிபுணராக கடமையாற்றிய போதே அவர் பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்தமையே இதற்குக் காரணமாகும்.

இந்த நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அரசாங்கத்தில் பணியாற்றும் போது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க முடியாது.

இந்நிலைமையால் அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிப்பது சிக்கலாக மாறியுள்ளதாகவும் இது சட்ட சட்டத்தின் முன் சவாலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் ராஜித சேனாரத்னவும் தனது தொழிலை விட்டு விலகாமல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்ததற்காக பதவியில் இருந்து நீக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

(Visited 256 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!