அமைதி பேச்சு: பாகிஸ்தான் விரைகிறது ஈரான் தூதுக்குழு!
அமெரிக்காவுடன் பேச்சு நடத்த ஈரான் தூதுக்குழு பாகிஸ்தான் நோக்கி பயணமாகியுள்ளது என தெரியவருகினறது.
ஈரான் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் தொடர்பான விவரம் இன்னும் வெளியாகவில்லை.
அமெரிக்காவின் தூதுக்குழுவுக்கு அந்நாட்டின் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமை தாங்குவார் எனக் கூறப்படுகின்றது.
ஈரானால் முன்வைக்கப்பட்ட பத்து முக்கிய அம்சங்களின் அடிப்படையில் கலந்துரையாடல் அமையும் என பாகிஸ்தானுக்கான ஈரான் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இஸ்ரேலின் தொடர்ச்சியான போர்நிறுத்த விதி மீறல்கள் இந்த இராஜதந்திர முயற்சியைச் சிதைக்கக்கூடும் என ஈரான் தரப்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
நாளை மாலை அல்லது சனிக்கிழமை இரு தரப்பு பேச்சு இஸ்லாமாபாத்தில் நடைபெறும்.




