உலகம் செய்தி

இஸ்லாமாபாத்திலிருந்து வெளியேறியது ஈரான் தூதுக்குழு!

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் இருந்து தாயகம் நோக்கி புறப்பட்டுள்ளனர்.

இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற அமைதி பேச்சு தோல்வி அடைந்த நிலையிலேயே அவர்கள் சென்றுள்ளனர்.

அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் மற்றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28-ம் திகதி முதல் போர் நடைபெற்று வந்தது.

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் கடந்த 8 ஆம் திகதி இருவாரகால போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.

இந்நிலையில் இரு தரப்புக்கும் இடையிலான அமைதி பேச்சு இஸ்லாமாபாத்தில் நேற்று ஆரம்பமானது.

அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவினரும், ஈரான் தரப்பில் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட தூதுக்குழுவினரும் இதில் பங்கேற்றனர்.

14 மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்தும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இரு தரப்பினரும் பாகிஸ்தானில் இருந்து புறப்பட்டுள்ளனர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!