உலகம் செய்தி

ஈரானிடம் நவீன தொழில்நுட்ப வலிமை: 160 இற்கு மேற்பட்ட ட்ரோன்கள் அழிப்பு!

ஈரான்மீது தாக்குதல் நடத்துவதற்கு வந்த 160 இற்கு மேற்பட்ட ட்ரோன்கள் இதுவரை தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

ஈரான் விமானப்படை தளபதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

ட்ரோன்களை தாக்கி அழிப்பதற்கு உள்நாட்டு தொழில்நுட்பமே பயன்படுத்தப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.

நவீன போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறிக்க ஈரானிய படையினர் புதுமையான பாதுகாப்பு உபகரணங்களுடன் தயாராக இருக்கின்றனர் எனவும் ஈரான் விமானப்படை தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் புதிய போர் உத்திகள் எதிரி நாடுகளுக்குப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரிகேடியர் ஜெனரல் அலிரேசா எல்ஹாமி Brigadier General Alireza Elhami சுட்டிக்காட்டியுள்ளார்.

ஈரானிய வான் எல்லைக்குள் நுழையும் எந்தவொரு நவீன அச்சுறுத்தலையும் முறியடிக்கத் தேவையான தொழில்நுட்ப வலிமை அந்நாட்டிடம் இருக்கின்றது என சில போர் நிபுணர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!