செய்தி விளையாட்டு

IPL Match 33 – மும்பை அணிக்கு 163 ஓட்டங்கள் இலக்கு

ஐபிஎல் தொடரின் 33ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாட, டிராவிஸ் ஹெட் நிதானமாக விளையாடினார்.

அணியின் ஸ்கோர் 7.3 ஓவரில் 59 ரன்னாக இருக்கும்போது அபிஷேக் சர்மா 28 பந்தில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த இஷான் கிஷன் 2 ரன்னில் வெளியேறினார்.

அதன்பின் வந்த நிதிஷ் ரெட்டி 19 ரன்களும், கிளாசன் 37 ரன்களும் சேர்த்தனர். கடைசி ஓவரில் அனிகெட் சர்மா 2 சிக்சரும், கம்மின்ஸ் ஒரு சிக்சரும் அடித்தனர்.

இதனால் சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் அடித்துள்ளது. அனிகெட் சர்மா 8 பந்தில் 18 ரன்கள் எடுத்தும், கம்மின்ஸ் 4 பந்தில் 8 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழாக்கமல் இருந்தனர்.

(Visited 13 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
Skip to content