May 14, 2025
Breaking News
Follow Us
செய்தி விளையாட்டு

IPL Match 33 – 4 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

ஐ.பி.எல். தொடரின் 33வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி, முதலில் ஆடிய ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது.

அபிஷேக் சர்மா 28 பந்தில் 40 ரன்னும், கிளாசன் 28 பந்தில் 37 ரன்னும், டிராவிஸ் ஹெட் 28 ரன்னும் எடுத்தனர். அனிகெட் வர்மா 8 பந்தில் 18 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை களமிறங்கியது. ரோகித் சர்மா 26 ரன்னும், ரிக்கல்டன் 31 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். வில் ஜாக்ஸ் 36 ரன் எடுத்து அவுட்டானார். பாண்ட்யா 21 ரன் எடுத்தார்.

இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 166 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

நடப்பு தொடரில் மும்பை அணி பெறும் 3வது வெற்றி இதுவாகும். ஐதராபாத் அணி பெற்ற 5வது தோல்வி இதுவாகும்.

(Visited 3 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி