IPL Match 11 – முதல் வெற்றியை பதிவு செய்த ராஜஸ்தான் அணி
ஐ.பி.எல். 2025 சீசனின் 11வது லீக் போட்டி கவுகாத்தியில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சி.எஸ்.கே. பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. கேப்டன் ருதுராஜ் பொறுப்புடன் ஆடி 63 ரன்கள் எடுத்தார்.
கடைசி கட்டத்தில் இறங்கிய ஜடேஜா 32 ரன்கள் எடுத்தார். எம்.எஸ்.தோனி 16 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.
ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தினார்.





