ஆசியா

சிங்கப்பூரில் தீவிரமடையும் இணைய மோசடிச் சம்பவங்கள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

சிங்கப்பூரில்இணைய மோசடிச் சம்பவங்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளமையினால் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு சுமார் 8,500 சம்பவங்கள் சென்ற ஆண்டு அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்யப்பட்டன.

2021ஆம் ஆண்டில் கையாளப்பட்ட 3100 சம்பவங்களைவிட அது ஒரு மடங்கிற்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.

சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு அமைப்பு அதன் வருடாந்திர அறிக்கையில் அந்த விவரங்களை வெளியிட்டது.

புகார் செய்யப்பட்ட போலி இணையப்பக்கங்களில் 80 விழுக்காட்டிற்கும் அதிகமானவை வங்கி, நிதிச் சேவைகள் துறையைச் சேர்ந்த நிறுவனங்களைப்போல் தோற்றம் அளித்தன.

அரசாங்க, தளவாடச் சேவை வழங்கும் நிறுவனங்கள் போலவும் போலியான பக்கங்கள் இருந்தன.

பிணைத்தொகை கோரும் நச்சுநிரல் சம்பவங்கள் சென்ற ஆண்டு 132ஆகப் பதிவானது. எண்ணிக்கை சற்றுக் குறைந்தபோதும் அது பெரிய பிரச்சினையாய்த் தொடர்ந்து நிலவுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

(Visited 11 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்

You cannot copy content of this page

Skip to content